Saturday 4th of May 2024 06:07:23 PM GMT

LANGUAGE - TAMIL
-
சிறைச்சாலைகளில் கைதிகளைப்  பார்வையிட ஆகஸ்ட் 15 முதல் அனுமதி!

சிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிட ஆகஸ்ட் 15 முதல் அனுமதி!


கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து சிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஆகஸ்ட் 15 முதல் நீக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கைதிகளை வாரத்துக்கு ஒருமுறை உறவினா்கள் பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளா் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் கைதிகளுக்கான உடைகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை கொண்டுவர முடியும்.

கைதிகளைப் பார்வையிட வருபவா்கள் முக கவசங்களை அணித்து உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறைச்சாலைக்குள் நுழைய முன்னர் பார்வையாளா்களின் உடல் வெப்பநிலை அளவிடப்படும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE